கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் இன்று திறப்பு


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

நாளை (13ஆம் திகதி) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை (வியாழக்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்; மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.