பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு 18 கோடி ரூபா இழப்பீடு


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இழப்பீட்டு தொகையாக 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வழங்கப்படவுள்ளது. 

காயமடைந்த 345 பேருக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு அமைய இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன என்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. 

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்காகவும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்புச் சம்பவங்களினால் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் மறுசீரமைக்கவென இரண்டு கோடி 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.