வீதியால் சென்ற பெண்களுக்கு ஆணுறுப்பை காட்டிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

பாறுக் ஷிஹான்

வீதியால் சென்ற  இரு பெண்களுக்கு தனது  ஆணுறுப்பை வெளிக்காட்டியதாக  இளைஞனை நையப்புடைத்த பொதுமக்கள்  பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை (6) மாலை 5 மணியளவில் பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதி 170 ஒஸ்மான் வீதி ஆதம்லெப்பை முகம்மட் றியாஸ் (வயது-21) என்ற இளைஞனை காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காயமடைந்த இளைஞன் சாய்ந்தமருதுவில் இருந்து மருதமுனை பகுதியை நோக்கி செல்வதற்காக பாண்டிருப்பு உள்ளக வீதி ஊடாக சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி உதவியாளர் என தெரிவிக்கப்படுவதோடு இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலஸஸார் வவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.