ஓட்டமாவடி, பதுரியா நகரில் பெண்ணொருவர் கொலை!



(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி, பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பதுரியா நகர் மீனவர் சங்க வீதியைச் சேர்ந்த உசனார் ராஹிலா (வயது 52) என்ற பெண்ணே கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த பெண்மணி நேற்றிரவு (10) காணாமல் போன நிலையில் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ளது பாழடைந்த வீடொன்றில் வைத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரனின் மகன் என்று தெரியவந்துள்ளது. அத்தோடு அந்நபர் பல வருடங்களுக்கு முன்னர் காவத்தமுனையில் அமைந்துள்ளது விசேட தேவையுடையோர் பாடசாலையில் கல்விகற்ற சிறுவன் ஒருவனை சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரியவதுள்ளது. 

கொலை செய்யப்பட குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.