மட்டக்களப்பில் பொலிஸ் பரிசோதனை மற்றும் வீதி அணிவகுப்பு



--கனகராசா சரவணன்--

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் மாவட்ட  சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு  நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (05) வெபர் மைதானத்தில் மட:ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம.எம்.டி தீகாவத்துர தலைமையில் இடம்பெற்றது

பொலிசாரின் 6 மாத்திற்கு ஒருமுறை இடம்பெறும் பொலிஸ் பரிசோதனை நடவடிக்கையின் முதற்கட்டமாக வெபர் மைதானத்தில சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸ் பொலிசாரை பரிசோதித்ததுடன் பொலிஸ் அணிவகுப்பை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டதுடன் பாடசலை ரீதியில் பொலிசாரால் நடாத்தப்பட்ட அணிவகுப்பில் தெரிவு செய்த மாணவவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து வெபர் மைதானத்தில் ஆரம்பித்த  பொலிசாரின் வீதி அணிவகுப்பு மட்டு தலைமையக பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்ற இந்த வீதி அணிவகுப்பை  காந்தி பூங்காவிற்கு முன்னாள் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக் கொண்டார் .