விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான விவாதப்போட்டி



ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தின் நிதி உதவியுடன் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க பொறிமுறைகளை உறுதிப்படுத்தல் செயற்திட்டத்துடன் இணைந்து விழுது நடாத்தும் விவாத போட்டிகள் 07.09.2019 அன்று மட்டக்களப்பு வந்தாறுமுலை வேல்ட் விசன் மண்டபத்தி;ல் இடம்பெற்றது.

இவ் விவாத அரங்கில்  11 அணிகளைக் கொண்ட 07 சுற்றுக்கள் இடம் பெற்றன இதில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கழகங்கள் போட்டியிட்டன இதன் நடுவர்களாக ஊடகவியலாளர், கல்வியாளர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் கலந்து கொண்டு தம்முடைய நடு நிலையான தீர்ப்புக்களை வழங்கினர்.

இறுதியில் கடுமையான போட்டிகளின் பின்னர் நான்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டன.  இவ்விவாத அரங்கை பார்வையிட பொதுமக்கள் உட்பட ஊடக நண்பர்களும் வருகை தந்தனர்.

இதன் தொடர்ச்சியான  விவாதப் போட்டிகள் இம்மாதம் இறுதியிலும் பாடசாலை மாணவர்களுக்கான விவாத போட்டிகள் அடுத்த வாரமும் இடம்பெறும்.