நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லமர்வு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் என்பன எற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிக்கும் செய்லமர்வு கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் இன்று(17) இடம்பெற்றது.


கல்முனை பிரதேச செயலக பிரதி திடடமிடல் பணிப்பாளர்.கே இராஜதுறை தலைமையிலும் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகா அவர்களில் நெறிப்படுத்தலில்
இடம்பெற்றது.

இதன் போது வீட்டுத்தோட்டம் மற்றும் கூட்டேறு செய்கையாளர்கள் கலந்து கொண்டனர் இதன் போது இவர்களுக்கு இயற்கை சேதன பசளை செய்கை பற்றி வளவாளர்களால் தெளிவுட்டப்பட்டதுடன் செயன் முறை பயிற்சியுமளிக்கப்பட்டது.

கலந்து கொண்ட பயனாளர்கள் தங்கள் வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை செய்கையின் போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தெரிவித்ததுடன் இதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்

இந்த செயலமர்வில் வளவாளராக விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜெயிலாப்தீன் மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் , பயனாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.