மகனையும் மனைவியையும் காப்பாற்றச் சென்ற குடும்பஸ்தர் ரயிலுடன் மோதி உயிரிழப்பு


(எப்.முபாரக்)
திருகோணமலை மட்கோப் பகுதியில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை  (08) மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அபயபுர ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என் ஜோஹான் ஜோசப் (27 வயது) எனத் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு:

உயிரிழந்தவரின் மகன் ரயில் வீதிக்குச் சென்றபோது மகனைப் பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இதையடுத்து மகனையும் மனைவியையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் அங்கு சென்றபோது ரயிலுடன் மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.