புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜயா அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தமைக்கு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார தலைவர் , மட்டக்களப்பு SPG தலைவர் எம். ஜெகவண்ணண் நன்றி தெரிவிப்பு.
சிறுபான்மைச் சமூகத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச எதிர்வரும் சில தினங்களில் மிளிரவுள்ள நிலையில் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு, மகளிர் அமைப்புகள், தொழிற் சங்கங்கள், புதிய இடது சாரிக் கட்சி.... என்று அனைவரும் தத்தமது ஆதரவுகளை சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளார்கள்.
இந் நிலையில்தான் தமிழ் மக்களின் நலன்களையும் கடந்தகால அனுபவங்களையும் குறிப்பாக தற்போது போட்டியிடுகின்ற பிரதான போட்டியாளர்களான சஜித் Vs கோத்தா இருவர்களையும் ஒப்பு நோக்கி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து இனவாத, மதவாத, குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
அத்தோடு தமிழ் சகோதரர்களுக்கு அதிகமான இன்னல்களையும் ஆபத்துக்களையும் ஆட்கடத்தல்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதை எல்லாம் எண்ணிப்பார்த்து சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்கின்ற தமிழ் அரசுக்கட்சியின் முடிவை தாம் பாராட்டி கௌரவித்துள்ளதுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட சில்லறைத் தனமானவர்களினதும் மஹிந்த குடும்பத்தின் ஏஜென்டுகளின் கதைகளுக்கும் பணத்திற்கும் ஏமாந்து விடாதீர்கள்.