ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு


ஒவ்வொரு வருடமும் தேசிய வாசிப்பு மாதமான ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் காணப்படும் நூலகங்களை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.



அந்த வகையில் இதனை சிறப்பிக்கும் முகமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெற்று முடிந்த வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை பாடசாலையின் நூலகக் குழுவின் ஏற்பாட்டில் பாடசாலையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் ஓட்டமாவடி மத்தி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப் மற்றும் கல்லூரி முதல்வர் எம்.எ.ஹலிம் இஸ்ஹாக், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நூலக ஏற்பாட்டுக் குழுவினர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.