டிப்பர் மோதியதில் சிறுமி ஸ்தலத்திலேயே பலி




வவுனியா இலுப்பையடி பகுதியில் வேகமாக சென்ற டிப்பர் மோதியதில் சிறுமி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதியுள்ளது.

இதன் காரணமாக 13 வயதான சிறுமி ஸ்தலத்தில் பலியானதுடன் தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் டிப்பரின் சாரதி தப்பியோட முற்பட்டபோது பொலிஸார் மற்றும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் டிப்பரினை சேதப்படுத்தியுள்ளனர்.