உங்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை நாங்கள் தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும்

(மு.கோகிலன்)
 சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகவும்,ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் நியமித்து எங்களால் செய்ய முடியாமல் போன அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


 புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆதரித்து வாழைச்சேனை செம்மண்னோடை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்; கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-  இனவாதத்தினை தோற்கடிப்பதற்கு அன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இனவாதத்தினை பரப்பி வாக்குகளை திசை திருப்ப முயற்சி செய்கின்றார்கள். நாங்கள் ஓய்வெடுக்கமல் வெற்றி பெற்றதன் பின்னர் ஓய்வெடுக்க வேண்டும்.  அரச உத்தியோகத்தர்களுக்கு 2500 ஊதியம் அதிகரித்து வழங்குவதாக ராஜபக்ஷக்களால் பத்து வருடங்கள் கூறியும் செய்ய முடியாமல்போனது.  பத்தாயிரம் அதிகரித்து தருகின்றோம் என்று நாங்கள் கூறிய போது எங்களிடம்அதிகாரம் உள்ளது என்று எங்களை ஏளனமாக பார்த்தார்கள். அதிகாரம் கையில் கிடைத்ததும் வழங்குவோம் என்றேன். அந்த வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியங்களை அதிகரித்துவழங்கினோம்.

உங்கள் முகத்தில் காணப்படும்மகிழ்ச்சியை நாங்கள் தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்துஅன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குங்கள். சஜித் பிரேமதாசவெற்றி பெறுகின்ற பொழுது பாராளுமன்றத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி எங்களால் செய்ய முடியாமல் போன அபிவிருத்திகளை செய்வதற்குஐந்து ஆண்டுகளுக்கு ஆணையை தருமாறு வேண்டுகின்றோம்