திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்தும் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 469 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இருப்பினும் இரண்டு நோயாளிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி வேறு இடங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த 738 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் அதில் 269 பேருக்கு எந்தவிதமான தொற்றுக்களும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
.