திருகோணமலையில் ஊரடங்கு சட்ட நேரத்தில் மதுபானங்களை விற்பனை செய்த மதுபான சாலை பொலிசாரால் முற்றுகை !

(கதிரவன்)
ஊரடங்கு சட்ட நேரத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த மதுபான சாலை ஒன்று நேற்று (23) திருகோணமலை தலைமையக பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மதுபான சாலைகளை திறப்பதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறிருக்க சட்டவிரோதமான முறையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த குறித்த மதுபானசாலையினை, திருகோணமலை தலைமையக காவல்துறையின் மது போதை தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விற்பனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை கையகப்படுத்தியதோடு அங்கிருந்த ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மொத்தமாக 200க்கும் அதிக மதுபான போத்தல்களும் ரூபா 200,000 பெறுமதியான பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.