குருநாகலில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பல பயிர்கள் அழிவு!

(ஜே.எப்.காமிலா பேகம்)
குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரகோன் தெரிவித்துள்ளார்.