மட்டக்களப்பில் யுவதி ஒருவரை காணவில்லை!


மட்டக்களப்பு பிரதேசத்தில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று சனிக்கிழமை(25) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா என்ற 27 வயதுடைய குறித்த யுவதி, தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்துவருவதாகவும், சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (25) திகதி காலை 10 மணிக்கு நண்பி ஒருவரிடம் சென்றுவருவதாக வீட்டில் இருந்து வெளியேறியவர் திரும்பி வராத நிலையில், அவரை தேடியபோது குறித்த யுவதி குறித்த எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து பெற்றோர் நேற்றிரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.