வேள்ல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்டமானது சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையுடன் இணைந்து சிறுவர் நேய மாதிரிப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் எனும் கருப்பொருளின் கீழ் நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள 05 ஆரம்பப் பாடசாலைகளை புனரமைப்புச்செய்து பாடசாலைச் சமூகங்களிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகள்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் MSS.நஜீம். பிரதிக் கல்விப்பணிப்பாளர் SMM.அமீர் பிரதிக் கல்விப்பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான செல்வி V.நிதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளைப் பார்வையிட்டு பாடசாலை சமூக பாவனைக்கு கையளித்தனர்.