களுத்துறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதிகள் மூவரும் சிறைச்சாலையின் தனி இடத்தில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தபோது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.