தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் தப்பியோட்டம்; ஒருவர் கைது!

களுத்துறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதிகள் மூவரும் சிறைச்சாலையின் தனி இடத்தில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தபோது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தப்பிச் சென்ற கைதி ஒருவர் களுத்துறை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏனைய இரு கைதிகளையும் தேடும் நடவடிக்கையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.