கொரோனா தொற்றில் இருந்து மேலும் 311 பேர் பூரண குணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 311 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 11,806 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், 58 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.