மட்டக்களப்பில் தற்போது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருகின்றது

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட ஓட்டமாவடியில் மாத்திரம் 60 தொற்றாளர்களும் மொத்தமாக மட்டு மாவட்டத்தில் 83 தெற்றாளர்கள் இனம் கானப்பட்டனர்.

மக்கள் வைரசுடன் புதிய வாழ்கையினை வாழப் பழகிக்கொள்ள தயாராகவேண்டும். உண்மையிலே வைரசானது எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றது மக்களை இலகுவாக தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது ஆகையினால் மக்கள் அவதானமாக செயல்படுவது அவசியமானது என சுகாதாரப்பிரிவினர் கருதுகின்றனர்.

வாழைச்சேனை தனிமைப்படுத்தல் கட்டுப்பாடானது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் அதிகளவான மக்களை கூடவிடாது சமூக இடைவெளியை கடைப்பித்து தங்களின் அன்றாடம் செயல்பாட்டில் ஈடுபடுமாறு சுகாதாரதுறையினர் வேண்டுகொள் விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய கொரோனா தொற்றாலர்களின் எண்னிக்கை குறைவடைந்து வருகின்ற போதும் கொழும்பு மற்று வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்ற நபர்களின் மூலமாகவே மட்டக்களப்பில் கொரோனா பரவல் ஆரம்பித்தது. முதலில் பெலியக்கொட மீன் சந்தையில் வியாபார தொடர்பில் இருந்து வருகைதந்தவர்களுடாகவே அதிகளவான தொற்றாளர்கள் ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேசங்களில் பதிவாகினர்.