சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ! கடந்த ஆண்டும் 500 மில்லியன் வழங்கப்பட்டது


சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குறித்த நிதி பங்களிப்பு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையின் ஒரு பகுதியாக குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே கடந்த ஆண்டு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

2020 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி கூறியது
அரசாங்கத்தின் நோக்கம் கடன்கள் மற்றும் நிதி உதவிகளைத் தாண்டி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதே, இதுவே நாட்டின் பொருளாதாரத்தை புதிய பாதைக்கு கொண்டு செல்லும்