பேய் விரட்டி 10 பேர் தனிமை-அம்பாறையில் சம்பவம்



தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை - மாயாதுன்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதோடு, சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.