பேஸ்புக் மூலம் மோசடி - அடுத்தது நீங்களாக இருக்கலாம் எச்சரிக்கை!



பேஸ்புக் மூலம் ஒரு பெண் ஒருவருடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்து சந்தேகநபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபாய் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதான சந்தேக நபர் நேற்று (15) நுகேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கணினி குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆடை தொழிலில் தான் ஈடுபட்டு வருவதாக சந்தேகநபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.