திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழுமையான அனுமதி



நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க (24) முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இதன்படி, திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.