இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்



இலங்கை இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் முதலாவது தளபதி ஆவார்.

58 வது இராணுவ தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவினால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.