அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளை தீயிட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை (19) 4 பேரை கைது செய்ததுடன் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்ட இந்த மே 9 திகதி வன்முறை சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு , அம்பறை சகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது
இதனையடுத்து இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 7 பேரை கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டதையடுத்து 23ம் திகதிவரை விளக்கமறியலில்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 4 பேரை இன்று கைது செய்ததையடுத்து இதுவரை 11 கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்