திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன.

திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இன்று  நண்பகல்  திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில்   நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள்  இடம்பெற்றதுடன் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.