இவ் வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படாது - லிட்ரோ நிறுவனம் !

இந்த வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த வருடத்திற்கான புதிய எரிவாயு வழங்குனர் ஒருவர் தெரிவாகியுள்ளார். எனவே அடுத்த 16 மாதங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தி, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.