நாளைய மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு !



நாளை (29) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், CC வலயங்களுக்கு காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.