குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி !



பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குழந்தை அழும் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய் குளியலறையை திறந்து பார்த்தபோது, அங்கு தனது மகள் குழந்தை பிரசவித்திருப்பதை கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.