கல்வி அமைச்சின் அறிவித்தல்!

தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.