வாகரையில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்


வாகரை பால்சேனைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமுற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு விபத்தினை எதிர்நோக்கியவர்களாவார்கள்.

இவர்களில பிரதேச சபை சாரதியான மீராமுகைதீன் அப்துள்காதர் வயது 40 என்பவர் இஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.


பஸ் சாரதி வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.