காணியில் இருந்த ஒரு சிறிய வழியூடாக நுழைந்த நாய்கள், ஆடுகளை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளன. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளருக்கு சுமார் ரூ.1.5 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த நாய்கள் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையில், இன்று ஆடுகள் எனில் நாளை மக்களும், சிறுவர்களும் தாக்கப்படக் கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாவனையற்ற நாய்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நகர சபையின் கடமையாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விரைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறுகின்றனர்.