30வருட தொடர்ச்சியான கல்விச் சேவையைப் பூர்த்தி செய்து, ஓய்வு பெற்றுச் செல்லும் புனித அருளானந்தர் வித்தியாலய அதிபர் எஸ்.பி.பிரான்சிஸ் அவர்களுக்கான பிரிபுவசார
வைபவம் பிரதி அதிபர் திருமதி என்.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற போது, அதிதிகள் வரவேற்கப்படுவதையும், பிரதம அதிதியும் புனித அருளானந்தர் ஆலய பங்குத் தங்தையுமான அருட்திரு ஜி.அம்புறோஸ் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், பிரதி அதிபர் பாராட்டுப் பத்திரம் வழங்கி வைப்பதையும் ஆசிரியைகள் பரிசுப் பொதியை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
'முரண்பாடு மிக்க சமூக அமைப்பில், தனது ஆளுமையினால் சவால்களுக்குச் சாதூரியமாக முகம் கொடுத்து பாடசாலையில் முன்னேற்றத்தைச் சாதித்து காட்டியவர் எங்கள் அதிபர். இப் பாடசாலையின் வரலாறு எழுதும்போது இப் பாடசாலையை பொற்காலத்திற்கு கொண்டு சென்ற முதற்தர அதிபராக இவர் பெயர் பதியப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.' –மெற்கண்டவாறு இவ. வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய புனித அருளானந்தர் ஆலய பங்குத் தங்தை அருடதிரு ஜி.அம்புறோஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து ஆசிர்யர்களுமே அதிபர் பற்றிய அடிமனது அபிப்பிராயங்களை வெளியிடத் தவறவில்லை. அனைவருமே அவரின் முன்மாதிரி, மனிதாபிமானம், பழகும் முறை, அதிகாரமற்ற அன்பான வழிநடத்தல், தாமாக முன்வந்து உதவுதல், பண்பு, கடின உழைப்பு, பாடசாலை பற்றிய முழு நேர சிந்தனை, பொறுமை, சகிப்பு, என்பன பற்றி ஏகோபித்த குரலில் பாராட்டு மழை பொழிந்தனர்.
இந் நிகழ்வின் சிறப்பம்சம் பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.கே.ரவீந்திரன் தனதுரையில், தனது வாழ்நாளில், ஊடகத்துறை அனுபவத்தில் எல்லாவகையிலும் நிறைவான பொருத்தமான இத்தகைய அதிபர் ஒருவரை தான் கண்டதில்லை என்று குறிப்பிட்டார். அதற்கு அவர் ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடும், அர்ப்பணிப்பும், அடிப்படை அமைத்துக் கொடுத்திருப்பதாக தான் கருதுவதாகவும் தெரிவித்தார். ஏனெனில் புனிதர் ஜேசு பிரானுக்கு பிடித்தமான கொள்ளைளனில் இருந்து கிஞ்சித்தும் பிசகாமல், முற்று முழுதாக பின்பற்றுபவராகத் திகழ்ந்தார். போலியான ஆன்மீகவாதிகளைப் பார்த்து பார்த்து சலித்துப் போய் இருந்த எமக்கு, ஆன்மீகவாதி எப்படி சமூகத்தை வழிநடாத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகவும் எடுத்துக் காட்டாகவும் தியாக சிந்தையுடன், சுயநலமேதுமின்றி செயற்பட்டவர். ஆன்மீகம், கல்வி இரண்டு துறைகளிலும் அவர் புடம் போட்ட தங்கம்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று குறிப்பிட்டார்.
மொத்தத்தில் இந் நிகழ்வானது, ஒரு சிறந்த அம்சத்தை வெளிக்காட்டியது. அபிவிருத்தி குன்றிவரும் பாடசாலைக்குச் சென்றால் அதற்கு காரணம் அதிபர் என்று ஆசிரியர்களும், ஆசிரியர்கள் என்று அதிபரும் முறையிடுவது வழக்கம். இதற்கு முற்றிலும் எதிர்மாறாக இப்பாடசாலையின் அபரீத வளர்ச்சிக்கு அதிபர்தான் காரணமென்று ஆசிரியர்களும், ஆசிரியர்கள்தான் காரணமென்று அதிபரும் தெரிவித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் அங்கு சிறந்ததொரு மனப்பாங்கு உருவாக்கப்பட்டுள்ளமையை உணரக் கூடியதாக இருக்கின்றது.