வீட்டில் வளர்த்த நாய் சமையலறையில் நுழைந்து சட்டியில் வாய் வைத்ததால் கொடூரமாக தண்டித்த நபர்



செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் கூறி குறித்த நபர் இவ்வாறு நாயை கட்டி இழுத்துச்சென்றுள்ளளார்.

இதன்போது கிராமவாசிகளால் காப்பாற்றப்பட்டு நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. நாயை தண்டித்த நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.