
மட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்
சென்ற திரு.தம்பிப்பிள்ளை- கனகசூரியம் அவர்களின் சேவையினைப் பாராட்டுமுகமாக
கிராமத் தலைவர் திரு.அ.கந்தவேள் தலைமையின்
கீழ் களுவாஞ்சிகுடி இராசமாணிக்க மண்டபத்தில்
களுவாஞ்சிகுடி கிராம மக்களால் பாராட்டு விழா விமரிசையாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இவ் விழாவில் கிராம முன்னேற்றச் சங்கங்கள்> விளையாட்டுக் கழகங்கள்> பழைய மாணவர்கள்> நலன்விரும்பிகள் ஆசிரியர்கள்> மாணவர்கள்> என பலர் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற அதிபர் திரு.தம்பிப்பிள்ளை கனகசூரியம்
அவர்களுக்கு அவரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா பாடி
தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.
