மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டி விபத்து - இருவர் வைத்தியசாலையில்

கல்முனை பெரிய நீலாவணையின் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் (இன்று01) சனி வடைபெற்றது. இதில்காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்தபெரியநீலாவணைக்கிராமத்தைச் சேர்ந்த ச.விஜயரெத்தினம் (வயது65) படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.