
ஏழை எளிமையில் பிறந்த இயேசு பாலன் ஏழை எளிய மக்களை இறைவனைக் காண அழைத்தார். ஆதரவற்றோரையும் வறுமையில் வாடும் ஏழைகளையும், வாழ வழிதெரியாது தவிக்கும் நமது மக்களுக்கு நமது அன்பையும் அரவணைப்பினையும் பகிர்ந்துகொடுத்து கிறிஸ்மஸ் விழாவை நம்மில் அர்த்தம்பெறச் செய்வோம். மனித நேயத்துடன் வாழவும் அனைத்து மக்களையும் மனிதப் பண்புடன் மதித்து மனிதம் மலர பாடுபடுவோம். அன்பு செய்யும் உள்ளங்களுக்கு வருடத்தில் ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ் விழாவே. நம்மில் உள்ள நல்லனவற்யைும் நல் அன்பையும் அனைவருடத்திலும் பகிர்ந்து கொண்டு இவ் விழாவினை கொண்டாடுவோம்!
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!