அரசடித்தீவில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனையில் இருந்து சைக்கிள் ஓட்டப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானம் வரை சென்று நிறைவடைந்தது. இதனை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெர்ணாண்டோ ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வழக்குமரம் ஏறுதல், தலையணைச்சமர், கண்கட்டி முட்டி உடைத்தல், சமனிலையோட்டம், கிடுகு பின்னுதல், பாற்சோறு ஊட்டுதல் போன்ற பல்வேறு போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.