ஊக்குவிப்பு என்பது நடத்தையைத் தூண்டும், வழிகாட்டும் அல்லது உறுதிப்படுத்தும் ஓர் செயன்முறையாகும். அந்த வகையில் ஒருவனிடம் ஏதோ ஒரு தேவைக்காக ஆரம்பித்து அந்தத் தேவை நிறைவு செய்யப்படும் வரை இடம்பெறுகின்ற ஒரு உள-உடலியக்கத் தொழிற்பாட்டினை ஊக்குவிப்பு எனலாம். பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்குப் பெற்றோர் ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.
பிள்ளைப் பருவமானது வாழ்க்கையில் மிக முக்கியமான சிறப்பியல்பு வாய்ந்த பருவமாகும். அந்த வகையில் 06 வயது தொடக்கம் 12 வயது வரையுள்ள காலம் பிள்ளைப் பருவமாகும். இக் காலப்பகுதியில் பிள்ளையின் வளர்ச்சி தடையின்றி சீராக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெற்றோரின் பங்கு இன்றியமையாததாகும். இப் பருவத்திலே பிள்ளை பாடசாலை செல்ல ஆரம்பிக்கின்றது. பிள்ளையினை உரிய வயதில் முன்பள்ளியிலும் பாடசாலையிலும் சேர்ப்பது பெற்றோரின் கடமையாகும். பிள்ளையை ஒழுங்கான முறையில் முன்பள்ளி செல்வதற்குப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். முன்பள்ளிக் கல்வியானது விளையாட்டு மூலமாகவே மேற்கொள்ளப்படுவதை உணர்ந்து கொண்டு பெற்றோரும் முன்பள்ளியில் கூறும் செயற்பாட்டை வீட்டில் பிள்ளை செய்வதற்கு உதவிகளை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் தான் பாடசாலைக்குச் செல்வதற்கு பெரும்பாலும் விரும்பினாலும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல விரும்புவதில்லை. தமது பெற்றோரை குறுகிய நேரமும் விட்டுப்பிரிய விரும்பாமையே இதற்குப் பிரதான காரணமாகும். அத்துடன் முன்பள்ளியில் பிள்ளையினைச் சேர்க்கும் போதும் பிள்ளைகள் அழுது அடம்பிடிப்பர். இதன் போது பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இதன் பின்னர் பிள்ளைகள் தமது பாடசாலையினை நேசிப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஊக்குவிப்பு ஆனது நடத்தையைத் தூண்டும், வழிகாட்டும் அல்லது உறுதிப்படுத்தும் ஓர் செயன்முறையென 'போல்' குறிப்பிட்டுள்ளார். இதனை மேற்கூறப்பட்ட செயற்பாடு மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பிள்ளைப்பருவத்திலே ஒரு பிள்ளையானது எழுத வாசிக்க ஆரம்பிக்கின்றது. பிள்ளையின் முதல் ஆசான் தனது பெற்றோரே ஆவர். எனவே இப்பருவத்தில் பெற்றோரின் ஊக்குவிப்பும் மிக அவசியமாகும். இதற்காகப் பெற்றோர் தமது ஓய்வு நேரத்தில் பிள்ளைக்குக் கதை சொல்லுதல், பிள்ளைக்கு எழுதவாசிக்கப் பயிற்சி வழங்குதல், பாடல் பாடிக்காட்டல் ஆகியவற்றை மேற்கொள்ளுவது இன்றியமையாததாகும். பெற்றோர் பேசும் வார்த்தைகளைக் கேட்டு பிள்ளையும் அவ்வார்த்தைகளைப் பேச முன்வரும். உதாரணமாக பெற்றோர் தமது கோபத்தை வெளிப்படுத்த பிரயோகிக்கும் தகாத வார்த்தையைப் பிள்ளையும் பாடசாலை நண்பர்களிடம் பிரயோகிக்கும். எனவே பிள்ளையின் முன்னோடியாகப் பெற்றோர் செயற்பட வேண்டும்.
வீட்டில் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்காக அவர்களுக்கு தண்டணை கொடுத்தலாகாது. தண்டணை வழங்குவதாலும், கொடூர வார்த்தை பிரயோகிப்பதாலும், பிள்ளை மீது கோபப்படுவதாலும் பிள்ளை பெற்றோரை வெறுக்கவும், உளநிலைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் வளர வாய்ப்புண்டு. பிள்ளை செய்யும் தவறுக்கு அவர்களை நல்வழிப்படுத்த நீதிக்கதைகள், நல்வழிப்படுத்தும் கருத்துக்களையும் கூறலாம்.
தமது பிள்ளையின் எழுத்தாற்றலை விருத்தியாக்க பெற்றோர் தமது பிள்ளைகளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கலாம். இன்றைய நவீன காலத்தில் பெற்றோர் தமது ஓய்வு நேரத்தில் பிள்ளைகளுடன் அவர்களது கல்வி, பாடசாலை, விளையாட்டு, அனுபவம் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவதில்லை. மாறாக தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றிலேயே நேரத்தினைச் செலவிடுகின்றனர். பிள்ளை பெற்றோரிடம் உரையாட வந்தாலும் பிள்ளைக்கு தமது திறன்பேசியிலுள்ள விளையாட்டுக்களை விளையாடக் கொடுத்துவிடுகிறார்கள். இது முற்றிலும் பிழையான நடத்தையாகும்.
ஒரு குழந்தை வாசிக்கத் தொடங்கும் முன் அக்குழந்தை ஆயிரம் கதைகளையாவது கேட்டிருக்க வேண்டும். வீட்டில் புத்தகங்கள் இருப்பது தந்தையின் கல்வித் தரத்தைப் போல் இரு மடங்கு முக்கியமானதாகும். குறைவான எழுத்தறிவுடைய பெற்றோரின் குழந்தைகள் வாசிப்பில் மோசமாக இருப்பதற்கு 72% ஆன வாய்ப்பு இருக்கின்றது. பிள்ளை பிரயோகிக்கும் சொற்களின் பொருளை பிள்ளை விளங்கியிருக்கும் என்பதை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணம்- அப்பா வேலைக்குச் சென்றார். இதில் வேலை என்பதன் பொருளை பிள்ளை அறிந்திருக்கும் என பெற்றோர் நினைப்பதை 'பியாஜே' முற்றாக நிராகரிக்கிறார். எனவே பெற்றோர் பிள்ளை பிரயோகிக்கும் வார்த்தையின் பொருளை அறிந்திருக்கிறதா என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளை அறியாத பொருள் விளக்கங்களை பெற்றோர் பிள்ளைக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனால் பிள்ளையின் மொழிவிருத்தி மேம்படும்.
பிள்ளை பாடசாலைக்கு உரிய நேரத்திற்கும் நேர்த்தியாகவும் செல்வதற்கும் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். பிள்ளையினை உரிய நேரத்திற்கு எழுப்பி உரிய கடமைகளை நிறைவேற்றி காலை உணவு அளித்து பாடசாலைக்கு அனுப்புதல் அவசியமாகும். இதனை பிள்ளை பிற்காலத்தில் தானே பழக்கப்படுத்திக்கொள்ளும். இதன் மூலம் பிள்ளை தனது நேரமுகாமைத்துவத்தினைக் விருத்தி செய்து கொள்ளும். பெற்றோர் தமது பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கனவினைக்காணல், அக்கறைகாட்டல் வேண்டும். பிள்ளை பாடம் படிக்கும் போது பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பிள்ளையின் கவனத்தைக் குழப்பாமல் இருக்கலாம்.
அத்துடன் ஒவ்வொரு பிள்ளையும் புலமைப் பரிசில் பரீட்சையினை எதிர்கொள்கின்றது. இப் பரீட்சையினை தமது பிள்ளையின் வாழ்வின் ஒரு மைல்கல்லாகவே பெற்றோர் பார்க்கின்றனர். இப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தலையில் அதிக சுமையினைச் சுமத்துகின்றார்கள். பரீட்சையில் சித்தியடையாமையைத் தமது கௌரவக்குறைவாகவே பெற்றோர் கருதுகின்றனர். இதனால் தமது பிள்ளை மனஉளச்சலுக்கு ஆளாவதை பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. நண்பர்களுடன் விளையாட வேண்டிய நேரத்தில் மேலதிக வகுப்பிற்கும் அனுப்பப்படுகின்றனர். ஈடுபாடு இன்றி வலுக்கட்டாயமாக வற்புறுத்திப் படிப்பிப்பதில் எவ்வித பயனுமில்லை. எனவே பெற்றோர் பிள்ளையின் மனநிலையை அறிந்து அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்.
இத்தகைய பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் வகுப்பறையில் இனிப்புக்களைப் பகிரும் போது சித்தியடையாத பிள்ளைகள் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். சித்தியடையாத பிள்ளையும் திறமையானவர்களே குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் தமது முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொண்டு தமது பிள்ளையின் மனதினை ஊக்குவிக்க வேண்டும். சித்தியடையாத பிள்ளைக்கு தண்டணை வழங்குவதால் எவ்வித பயனும் இல்லை. அவர்களுக்கு அடுத்து பல பரீட்சைகள் உண்டு எனவும் அதில் இதை விட சிறப்பாகச் செயற்பட முடியும் எனவும் ஊக்குவிக்கலாம்.
வறிய பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவது மிகவும் மந்தமாகவே உள்ளது. பெரும்பாலும் இத்தகைய வறிய பெற்றோர் பாடசாலையில் பிள்ளையின் கல்விச் செயற்பாட்டை அறிய விரும்பாதவர்களாகவே உள்ளனர். இதனால் பிள்ளையின் கல்விச் செயற்பாடு மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். எனவே பெற்றோர் தமது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டை அக்கறைகொண்டு ஊக்குவித்தல் வேண்டும். இதற்காகப் பெற்றோர் தமது பிள்ளையுடன் அன்பு, அரவணைப்புக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும் பிள்ளையின் பயிற்சிக் கொப்பிகளைப் பார்த்து அவர்களுக்கு ஏதும் குழப்பங்கள் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். பிள்ளை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுமிடத்து அவர்களுக்கு சிறிய பரிசில்களை வழங்கி ஊக்குவிக்கலாம், வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். மாறாக குறைவான மதிப்பெண் பெற்றால் அடுத்த பரீட்சையில் சிறப்பாகச் செயற்படுவதற்கான ஊக்குவிப்பினை வழங்கலாம். இத்தகைய செயற்பாட்டினால் பிள்ளையின் கல்விச் செயற்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளையின் கல்வி விருத்திக்கும் போசாக்கிற்கும் பெற்றோர் தமது பிள்ளைக்கு ஆரோக்கியமான உணவினை வழங்குதல் வேண்டும். இதனால் பிள்ளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் தனது கற்றலில் ஈடுபடும்.
தொகுத்து நோக்கும் போது பெரும்பாலும் பெற்றோர் வழங்;க வேண்டிய ஊக்குவிப்பு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்குகொள்வதை அவதானிக்கலாம்.
புலேந்திரன் ஹிந்துஜா,
கல்வியியல் சிறப்புக் கற்கை,
2ஆம் வருடம்,1ஆம் அரையாண்டு,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.
பிள்ளைப் பருவமானது வாழ்க்கையில் மிக முக்கியமான சிறப்பியல்பு வாய்ந்த பருவமாகும். அந்த வகையில் 06 வயது தொடக்கம் 12 வயது வரையுள்ள காலம் பிள்ளைப் பருவமாகும். இக் காலப்பகுதியில் பிள்ளையின் வளர்ச்சி தடையின்றி சீராக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெற்றோரின் பங்கு இன்றியமையாததாகும். இப் பருவத்திலே பிள்ளை பாடசாலை செல்ல ஆரம்பிக்கின்றது. பிள்ளையினை உரிய வயதில் முன்பள்ளியிலும் பாடசாலையிலும் சேர்ப்பது பெற்றோரின் கடமையாகும். பிள்ளையை ஒழுங்கான முறையில் முன்பள்ளி செல்வதற்குப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். முன்பள்ளிக் கல்வியானது விளையாட்டு மூலமாகவே மேற்கொள்ளப்படுவதை உணர்ந்து கொண்டு பெற்றோரும் முன்பள்ளியில் கூறும் செயற்பாட்டை வீட்டில் பிள்ளை செய்வதற்கு உதவிகளை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் தான் பாடசாலைக்குச் செல்வதற்கு பெரும்பாலும் விரும்பினாலும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல விரும்புவதில்லை. தமது பெற்றோரை குறுகிய நேரமும் விட்டுப்பிரிய விரும்பாமையே இதற்குப் பிரதான காரணமாகும். அத்துடன் முன்பள்ளியில் பிள்ளையினைச் சேர்க்கும் போதும் பிள்ளைகள் அழுது அடம்பிடிப்பர். இதன் போது பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இதன் பின்னர் பிள்ளைகள் தமது பாடசாலையினை நேசிப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஊக்குவிப்பு ஆனது நடத்தையைத் தூண்டும், வழிகாட்டும் அல்லது உறுதிப்படுத்தும் ஓர் செயன்முறையென 'போல்' குறிப்பிட்டுள்ளார். இதனை மேற்கூறப்பட்ட செயற்பாடு மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பிள்ளைப்பருவத்திலே ஒரு பிள்ளையானது எழுத வாசிக்க ஆரம்பிக்கின்றது. பிள்ளையின் முதல் ஆசான் தனது பெற்றோரே ஆவர். எனவே இப்பருவத்தில் பெற்றோரின் ஊக்குவிப்பும் மிக அவசியமாகும். இதற்காகப் பெற்றோர் தமது ஓய்வு நேரத்தில் பிள்ளைக்குக் கதை சொல்லுதல், பிள்ளைக்கு எழுதவாசிக்கப் பயிற்சி வழங்குதல், பாடல் பாடிக்காட்டல் ஆகியவற்றை மேற்கொள்ளுவது இன்றியமையாததாகும். பெற்றோர் பேசும் வார்த்தைகளைக் கேட்டு பிள்ளையும் அவ்வார்த்தைகளைப் பேச முன்வரும். உதாரணமாக பெற்றோர் தமது கோபத்தை வெளிப்படுத்த பிரயோகிக்கும் தகாத வார்த்தையைப் பிள்ளையும் பாடசாலை நண்பர்களிடம் பிரயோகிக்கும். எனவே பிள்ளையின் முன்னோடியாகப் பெற்றோர் செயற்பட வேண்டும்.
வீட்டில் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்காக அவர்களுக்கு தண்டணை கொடுத்தலாகாது. தண்டணை வழங்குவதாலும், கொடூர வார்த்தை பிரயோகிப்பதாலும், பிள்ளை மீது கோபப்படுவதாலும் பிள்ளை பெற்றோரை வெறுக்கவும், உளநிலைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் வளர வாய்ப்புண்டு. பிள்ளை செய்யும் தவறுக்கு அவர்களை நல்வழிப்படுத்த நீதிக்கதைகள், நல்வழிப்படுத்தும் கருத்துக்களையும் கூறலாம்.
தமது பிள்ளையின் எழுத்தாற்றலை விருத்தியாக்க பெற்றோர் தமது பிள்ளைகளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கலாம். இன்றைய நவீன காலத்தில் பெற்றோர் தமது ஓய்வு நேரத்தில் பிள்ளைகளுடன் அவர்களது கல்வி, பாடசாலை, விளையாட்டு, அனுபவம் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவதில்லை. மாறாக தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றிலேயே நேரத்தினைச் செலவிடுகின்றனர். பிள்ளை பெற்றோரிடம் உரையாட வந்தாலும் பிள்ளைக்கு தமது திறன்பேசியிலுள்ள விளையாட்டுக்களை விளையாடக் கொடுத்துவிடுகிறார்கள். இது முற்றிலும் பிழையான நடத்தையாகும்.
ஒரு குழந்தை வாசிக்கத் தொடங்கும் முன் அக்குழந்தை ஆயிரம் கதைகளையாவது கேட்டிருக்க வேண்டும். வீட்டில் புத்தகங்கள் இருப்பது தந்தையின் கல்வித் தரத்தைப் போல் இரு மடங்கு முக்கியமானதாகும். குறைவான எழுத்தறிவுடைய பெற்றோரின் குழந்தைகள் வாசிப்பில் மோசமாக இருப்பதற்கு 72% ஆன வாய்ப்பு இருக்கின்றது. பிள்ளை பிரயோகிக்கும் சொற்களின் பொருளை பிள்ளை விளங்கியிருக்கும் என்பதை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணம்- அப்பா வேலைக்குச் சென்றார். இதில் வேலை என்பதன் பொருளை பிள்ளை அறிந்திருக்கும் என பெற்றோர் நினைப்பதை 'பியாஜே' முற்றாக நிராகரிக்கிறார். எனவே பெற்றோர் பிள்ளை பிரயோகிக்கும் வார்த்தையின் பொருளை அறிந்திருக்கிறதா என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளை அறியாத பொருள் விளக்கங்களை பெற்றோர் பிள்ளைக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனால் பிள்ளையின் மொழிவிருத்தி மேம்படும்.
பிள்ளை பாடசாலைக்கு உரிய நேரத்திற்கும் நேர்த்தியாகவும் செல்வதற்கும் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். பிள்ளையினை உரிய நேரத்திற்கு எழுப்பி உரிய கடமைகளை நிறைவேற்றி காலை உணவு அளித்து பாடசாலைக்கு அனுப்புதல் அவசியமாகும். இதனை பிள்ளை பிற்காலத்தில் தானே பழக்கப்படுத்திக்கொள்ளும். இதன் மூலம் பிள்ளை தனது நேரமுகாமைத்துவத்தினைக் விருத்தி செய்து கொள்ளும். பெற்றோர் தமது பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கனவினைக்காணல், அக்கறைகாட்டல் வேண்டும். பிள்ளை பாடம் படிக்கும் போது பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பிள்ளையின் கவனத்தைக் குழப்பாமல் இருக்கலாம்.
அத்துடன் ஒவ்வொரு பிள்ளையும் புலமைப் பரிசில் பரீட்சையினை எதிர்கொள்கின்றது. இப் பரீட்சையினை தமது பிள்ளையின் வாழ்வின் ஒரு மைல்கல்லாகவே பெற்றோர் பார்க்கின்றனர். இப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தலையில் அதிக சுமையினைச் சுமத்துகின்றார்கள். பரீட்சையில் சித்தியடையாமையைத் தமது கௌரவக்குறைவாகவே பெற்றோர் கருதுகின்றனர். இதனால் தமது பிள்ளை மனஉளச்சலுக்கு ஆளாவதை பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. நண்பர்களுடன் விளையாட வேண்டிய நேரத்தில் மேலதிக வகுப்பிற்கும் அனுப்பப்படுகின்றனர். ஈடுபாடு இன்றி வலுக்கட்டாயமாக வற்புறுத்திப் படிப்பிப்பதில் எவ்வித பயனுமில்லை. எனவே பெற்றோர் பிள்ளையின் மனநிலையை அறிந்து அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்.
இத்தகைய பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் வகுப்பறையில் இனிப்புக்களைப் பகிரும் போது சித்தியடையாத பிள்ளைகள் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். சித்தியடையாத பிள்ளையும் திறமையானவர்களே குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் தமது முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொண்டு தமது பிள்ளையின் மனதினை ஊக்குவிக்க வேண்டும். சித்தியடையாத பிள்ளைக்கு தண்டணை வழங்குவதால் எவ்வித பயனும் இல்லை. அவர்களுக்கு அடுத்து பல பரீட்சைகள் உண்டு எனவும் அதில் இதை விட சிறப்பாகச் செயற்பட முடியும் எனவும் ஊக்குவிக்கலாம்.
வறிய பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவது மிகவும் மந்தமாகவே உள்ளது. பெரும்பாலும் இத்தகைய வறிய பெற்றோர் பாடசாலையில் பிள்ளையின் கல்விச் செயற்பாட்டை அறிய விரும்பாதவர்களாகவே உள்ளனர். இதனால் பிள்ளையின் கல்விச் செயற்பாடு மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். எனவே பெற்றோர் தமது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டை அக்கறைகொண்டு ஊக்குவித்தல் வேண்டும். இதற்காகப் பெற்றோர் தமது பிள்ளையுடன் அன்பு, அரவணைப்புக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும் பிள்ளையின் பயிற்சிக் கொப்பிகளைப் பார்த்து அவர்களுக்கு ஏதும் குழப்பங்கள் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். பிள்ளை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுமிடத்து அவர்களுக்கு சிறிய பரிசில்களை வழங்கி ஊக்குவிக்கலாம், வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். மாறாக குறைவான மதிப்பெண் பெற்றால் அடுத்த பரீட்சையில் சிறப்பாகச் செயற்படுவதற்கான ஊக்குவிப்பினை வழங்கலாம். இத்தகைய செயற்பாட்டினால் பிள்ளையின் கல்விச் செயற்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளையின் கல்வி விருத்திக்கும் போசாக்கிற்கும் பெற்றோர் தமது பிள்ளைக்கு ஆரோக்கியமான உணவினை வழங்குதல் வேண்டும். இதனால் பிள்ளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் தனது கற்றலில் ஈடுபடும்.
தொகுத்து நோக்கும் போது பெரும்பாலும் பெற்றோர் வழங்;க வேண்டிய ஊக்குவிப்பு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்குகொள்வதை அவதானிக்கலாம்.
புலேந்திரன் ஹிந்துஜா,
கல்வியியல் சிறப்புக் கற்கை,
2ஆம் வருடம்,1ஆம் அரையாண்டு,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.