மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து மூவர் படுகாயம் : வடி சாராய பைக்கற் மீட்பு

அரசடித்தீவில் இன்று இடம்பெற்ற  விபத்தில்  மூன்று பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,

அரசடித்தீவு  கிட்டு சந்தியில்   மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள்   வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அம்பிளாந்துறையை சேர்ந்த  ஆசிரியர் ஒருவருடன்  நேருக்கு நேர் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது 


மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இருவரும் பலத்த காயங்களுடன்
மகிழடித்தீவு ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் வடி சாராய பைக்கற்றுகளுடன் வந்திருந்துள்ளனர் ,
இது தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .