ஹிஸ்புல்லா , அசாத் சாலி தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா   மற்றும் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி  ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது இவ்வாறு இராஜினாமா கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா   1987 ஆம் ஆண்டு மாகாண சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தவர் .