இன்றைய காலகட்டத்தில் கல்வி இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. அறிவுசார், நடத்தைசார், நுட்பம்சார் விருத்திகளினுடன் மாணவர்களை மேன்மையடையச் செய்யவும், சிறந்த ஆளுமையுள்ள மாணாக்கர்களை சமூகத்தில் உருவாக்கவும் பலர் முனைப்புடன் செயற்படுவதை இன்றைய காலச் சூழ்நிலையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று எமது சமூகத்தில் மாணவர்களை முதனிலைப்படுத்த பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் பல பயன்தரு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனினும் சகல பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் வளப்பாய்ச்சல் வேறுபாட்டினால் அவர்களின் அடைவுமட்டங்களில் வேறுபாடு காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தமது இலக்குகள், நோக்கங்களை அடைவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன? அதைத் தீர்ப்பதற்க்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதைப்பற்றி ஆராய்வது மிக முக்கியமானதாகும்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளாக சகல பாடசாலைகளிலும் மனித பௌதீக வளங்கள் சம அளவில் பாய்ச்சப்படாமை பெரும் குறைபாடாக உள்ளது. நகர்ப்புறப் பாடசாலைகளோடு ஒப்பிடும் போது கிராமப் புற பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை மிக அதிகமாகக் காணப்படுவதை எமது சமூகத்தில் காணுகின்றோம். குறைந்த வருமான மட்டத்தையுடைய குடும்பங்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதனால் மாணவர்கள் தமது கல்வி நிலையைத் தொடர முடியாமல் அவதியுறும் நிலையையும் எமது சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகின்றது. ஓப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் சர்வ வல்லமை உள்ளவர்களாக எதிர்காலத்தில் வருவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இலங்கையில் அரசாங்கம் மாற மாற கல்வித்திட்டங்களும் ஆட்சிக்கு வரும் அதிகாரிகளினால் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு கலைத்திட்டங்கள், கல்வித்திட்டஙகள் என்பன மாற்றப்படுவதை நாம் காண்கின்றோம். இதனால் மாணவர்கள் தெளிவில்லாத ஒரு நிலையை அடைகின்றனர். அது மட்டுமல்லாமல் இவ்வாறான சூழ்நிலைகளால் ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். இன்று மாணவர்களிடையே ஒழுக்கம் நன்னடத்தை நேர்மை ஒற்றுமை என்பனவற்றில் பலர் அக்கறைகாட்டாமல் செயற்படுவதை ஒரு பிரச்சனையாகக் காணமுடிகின்றது. முக்கியமாக இலங்கையில் இடம்பெறுகின்ற இனப்போரினால் பல்வேறு பட்ட சவால்களை மாணவர்கள் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு சந்தேகத்திற்கிடமாகக் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகி பாடசாளைகளுக்குச் செல்லாமலும் பாடசாலையை இடைநடுவே விட்டும் கல்வியைத் தொடரமுடியாமலும் இருப்பதை நாம் கண் முன்னே காண்கின்றோம். போர்ச் சூழலில் மக்கள் அகதிகளாகவும் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு இன்னோர் இடத்துக்குச் செல்லும் போது அங்கு மாணவர்கள் கற்கும் வசதியின்றி கற்காமல் தமது கல்வி பாதிக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. யுத்த காலகட்டத்தில் பாடசாலைகளிலுள்ள மனித பௌதீக வளங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் பாடப் புத்தகங்கள் என்பன உரிய காலகட்டத்தில் கிடைக்காமல் விடுவதாலும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் போன்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இன்றைய கற்றல் சூழலில் கற்பித்தல் முறைகள் ஒழுங்கான முறையில் பயன்படுத்தப்படாமை ஒரு பிரச்சினையாக உள்ளது. பயிற்சிபெற்ற ஆசிரியர்களின்மையும், படிப்பதற்கேற்ற சூழலின்மையும் பெரும் பிரச்சனையாக எமது சமூக மாணவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாமரமக்களிடம் ஆங்கில மொழியின் ஊடுருவல் குறைவாகக் காணப்படுவதனால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகள் முன்னேற்றங்கள் என்பனவற்றை உடனுக்குடன் அறிவதில் காலதாமதங்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அனேகமான உயர்தர புத்தகங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கப்படாமை ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. இன்று கல்வி அறிவுக்குக்கற்கும் நிலை மாறி போட்டி ரீதியாக அதிகூடிய மதிப்பெண் பெறும் வகையிலான கல்விப்போக்கே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் தாம் பாடசாலையில் கற்பது மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களுக்கும் சென்று கற்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சில மாணவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு படிக்கச் செல்கின்றோம் என பெற்றோர்களிடம் கூறி படக்கொட்டகைகளுக்குச் செல்வதும் காதலர் என்ற தோரணையில் நேரத்தை வீணாக்கியும் மதுபோதைக்கு அடிமையாகியும் பொய்களவு கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவதையும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ள ஒரு நாட்டில் அவற்றை தீர்த்து ஒரு சுமுகமான நிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்ல வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வுகளாக சமூகத்தில் பிரச்சினைக்குள்ளாகும் பாடசாலையை இனங்கண்டு அங்கு வளப்பாய்ச்சல் குறைவாகக் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு கல்வித்திணைக்களத்துக்கு உரியதாகும். இன்று மனித வளப்பற்றாக்குறை பௌதீக வளப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் பாடசாலையில் காணப்படுமிடத்து உரிய ஆசிரியர்களை நியமித்தும் கட்டட தளபாட வசதிகளை ஏற்படுத்தியும் வளங்களைப் பெற்றுக் கொடுத்து பாடசாலையைத் திறம்படக்கொண்டு செல்ல முன்வர வேண்டும். பாடசாலைக்கு வரும் மாணவர்களின் வறுமையான மாணவர்களை இனங்கண்டு அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி கிராமசேவையாளரூடாகவோ பாராளுமன்ற உறுப்பினரூடாகவே அரசாங்க அதிபரூடாகவோ சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கி உழைக்கும் வழிகளை அம்மக்களுக்கு இனங்காட்டுவதனூடாக பொருளாதாரச் சிக்கலை ஒரளவு தவிர்த்துக் கொள்ளலாம்.
விஞ்ஞான தொழில்நுட்ப மயமான இக்காலகட்டத்தில் இவ் வசதிகளைக் கொண்டிராத பாடசாலைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது மிக முக்கியமாகும். அப்போதே தொழில்நுட்ப மயமான இக்காலகட்டத்தில் சர்வ வல்லமையுள்ள மாணவர்களை எமது சமூகத்திலிருந்து உருவாக்கி கொள்ளலாம். காலத்திற்கு காலம் வரும் அரசாங்கங்கள் இந்நாட்டின் கல்வியின் கலைத்திட்டம் கல்வித்திட்டங்களை மாற்றம் கொண்டு வராமல் இருக்க சட்டம் கொண்டு வரப்படல் வேண்டும். அவ் அமைப்பு காலச்சூழலுக்கு ஏற்ப கல்வியை மாற்றிக் கொண்டு வளர்த்துக் கொண்டும் செல்லல் வேண்டும். குறிப்பாக மற்றைய நாடுகளுடன் ஈடுகொடுக்கக் கூடிய கல்வியாகவும் நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்லும் கல்வியாகவும் காணப்படுவது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் நேர்மை கட்டுப்பாடு பழக்க வழக்கம் போன்ற பல எண்ணக்கருக்களை வளர்க்க வழிகாட்டல் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல் வேண்டும். இலங்கையில் இடம்பெறும் இனப்போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வழிவகை செய்ய வேண்டும். இக்கொடூர யுத்தத்தை இல்லாதொழிப்பதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு அச்சமின்றி தமது கல்வியைத் தொடர வழியேற்படும். அகதிகளாக மாறும் நிலை காணப்படும். பாடசாலைகளுக்குத் தேவையான மனித பௌதீக வளங்களை, பாடப் புத்தகங்களை, சுற்றறிக்கைகள் உரிய நேரத்தில் கிடைப்பதால் பாடசாலை பயன்தரு பாடசாலையாக மாற வழியேற்படும். இலங்கையின் தாய்மொழியை அபிவிருத்தியடையச் செய்யும் அதேநேரம் ஆங்கில மொழித் தேர்ச்சியையும் சகல இன மக்களிடையேயும் வளர்க்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு மாணவர்கள் உலக அரங்கில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அறியக்கூடியதாகவும் பாரம் பரிய கலை கலாசார பண்பாட்டம்சங்களை பேணிப்பாதுகாத்து உலகிற்கு பறைசாற்றவும் முடியும். அது மட்டுமல்லாமல் சிங்கள தழிழ் பேசும் மக்களை தங்களுக்கிடையே இடைத்தொடர்புகளை அதிகரிக்கவும் இது சிறந்த வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.
தற்கால இலங்கை திருநாட்டின் மாணவச் செல்வங்கள் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரசின் ஊடுருவல் தாக்குதல் காரணமாக கற்றல் சிறையுற்று முடங்கிக் கிடக்கின்ற துர்பாக்கிய நிலைக்கு மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தொட்டு பல்கலைக்கழக மாணவர்கள் வரை கற்றல் செயற்பாடுகள் நலிவிழந்த நிலையில் சென்று கொண்டு இருப்பதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தரம் ஐந்து புலமைப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்கின்ற பாடசாலை மாணவர்களே இதன் தாக்கம் காரணமாக கதிரவனை இருள் மேகம் சூழ்ந்ததை போல் அவர்களது கற்றல் செயற்பாடுகளும் ஒளி இழந்து திறன் குன்றி தேக்க நிலையை அடைந்து கொண்டிப்பதனை அவதானிக்கலாம்.
இன்றைய கற்றல் சூழலில் கற்பித்தல் முறைகள் ஒழுங்கான முறையில் பயன்படுத்தப்படாமை ஒரு பிரச்சினையாக உள்ளது. பயிற்சிபெற்ற ஆசிரியர்களின்மையும், படிப்பதற்கேற்ற சூழலின்மையும் பெரும் பிரச்சனையாக எமது சமூக மாணவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாமரமக்களிடம் ஆங்கில மொழியின் ஊடுருவல் குறைவாகக் காணப்படுவதனால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகள் முன்னேற்றங்கள் என்பனவற்றை உடனுக்குடன் அறிவதில் காலதாமதங்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அனேகமான உயர்தர புத்தகங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கப்படாமை ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. இன்று கல்வி அறிவுக்குக்கற்கும் நிலை மாறி போட்டி ரீதியாக அதிகூடிய மதிப்பெண் பெறும் வகையிலான கல்விப்போக்கே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் தாம் பாடசாலையில் கற்பது மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களுக்கும் சென்று கற்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சில மாணவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு படிக்கச் செல்கின்றோம் என பெற்றோர்களிடம் கூறி படக்கொட்டகைகளுக்குச் செல்வதும் காதலர் என்ற தோரணையில் நேரத்தை வீணாக்கியும் மதுபோதைக்கு அடிமையாகியும் பொய்களவு கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவதையும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ள ஒரு நாட்டில் அவற்றை தீர்த்து ஒரு சுமுகமான நிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்ல வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வுகளாக சமூகத்தில் பிரச்சினைக்குள்ளாகும் பாடசாலையை இனங்கண்டு அங்கு வளப்பாய்ச்சல் குறைவாகக் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு கல்வித்திணைக்களத்துக்கு உரியதாகும். இன்று மனித வளப்பற்றாக்குறை பௌதீக வளப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் பாடசாலையில் காணப்படுமிடத்து உரிய ஆசிரியர்களை நியமித்தும் கட்டட தளபாட வசதிகளை ஏற்படுத்தியும் வளங்களைப் பெற்றுக் கொடுத்து பாடசாலையைத் திறம்படக்கொண்டு செல்ல முன்வர வேண்டும். பாடசாலைக்கு வரும் மாணவர்களின் வறுமையான மாணவர்களை இனங்கண்டு அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி கிராமசேவையாளரூடாகவோ பாராளுமன்ற உறுப்பினரூடாகவே அரசாங்க அதிபரூடாகவோ சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கி உழைக்கும் வழிகளை அம்மக்களுக்கு இனங்காட்டுவதனூடாக பொருளாதாரச் சிக்கலை ஒரளவு தவிர்த்துக் கொள்ளலாம்.
விஞ்ஞான தொழில்நுட்ப மயமான இக்காலகட்டத்தில் இவ் வசதிகளைக் கொண்டிராத பாடசாலைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது மிக முக்கியமாகும். அப்போதே தொழில்நுட்ப மயமான இக்காலகட்டத்தில் சர்வ வல்லமையுள்ள மாணவர்களை எமது சமூகத்திலிருந்து உருவாக்கி கொள்ளலாம். காலத்திற்கு காலம் வரும் அரசாங்கங்கள் இந்நாட்டின் கல்வியின் கலைத்திட்டம் கல்வித்திட்டங்களை மாற்றம் கொண்டு வராமல் இருக்க சட்டம் கொண்டு வரப்படல் வேண்டும். அவ் அமைப்பு காலச்சூழலுக்கு ஏற்ப கல்வியை மாற்றிக் கொண்டு வளர்த்துக் கொண்டும் செல்லல் வேண்டும். குறிப்பாக மற்றைய நாடுகளுடன் ஈடுகொடுக்கக் கூடிய கல்வியாகவும் நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்லும் கல்வியாகவும் காணப்படுவது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் நேர்மை கட்டுப்பாடு பழக்க வழக்கம் போன்ற பல எண்ணக்கருக்களை வளர்க்க வழிகாட்டல் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல் வேண்டும். இலங்கையில் இடம்பெறும் இனப்போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வழிவகை செய்ய வேண்டும். இக்கொடூர யுத்தத்தை இல்லாதொழிப்பதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு அச்சமின்றி தமது கல்வியைத் தொடர வழியேற்படும். அகதிகளாக மாறும் நிலை காணப்படும். பாடசாலைகளுக்குத் தேவையான மனித பௌதீக வளங்களை, பாடப் புத்தகங்களை, சுற்றறிக்கைகள் உரிய நேரத்தில் கிடைப்பதால் பாடசாலை பயன்தரு பாடசாலையாக மாற வழியேற்படும். இலங்கையின் தாய்மொழியை அபிவிருத்தியடையச் செய்யும் அதேநேரம் ஆங்கில மொழித் தேர்ச்சியையும் சகல இன மக்களிடையேயும் வளர்க்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு மாணவர்கள் உலக அரங்கில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அறியக்கூடியதாகவும் பாரம் பரிய கலை கலாசார பண்பாட்டம்சங்களை பேணிப்பாதுகாத்து உலகிற்கு பறைசாற்றவும் முடியும். அது மட்டுமல்லாமல் சிங்கள தழிழ் பேசும் மக்களை தங்களுக்கிடையே இடைத்தொடர்புகளை அதிகரிக்கவும் இது சிறந்த வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.
தற்கால இலங்கை திருநாட்டின் மாணவச் செல்வங்கள் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரசின் ஊடுருவல் தாக்குதல் காரணமாக கற்றல் சிறையுற்று முடங்கிக் கிடக்கின்ற துர்பாக்கிய நிலைக்கு மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தொட்டு பல்கலைக்கழக மாணவர்கள் வரை கற்றல் செயற்பாடுகள் நலிவிழந்த நிலையில் சென்று கொண்டு இருப்பதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தரம் ஐந்து புலமைப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்கின்ற பாடசாலை மாணவர்களே இதன் தாக்கம் காரணமாக கதிரவனை இருள் மேகம் சூழ்ந்ததை போல் அவர்களது கற்றல் செயற்பாடுகளும் ஒளி இழந்து திறன் குன்றி தேக்க நிலையை அடைந்து கொண்டிப்பதனை அவதானிக்கலாம்.
இலங்கை அரசாங்கம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்தி வருகின்றது. அதாவது இணைய வகுப்புக்கள், தொலைக்காட்சி, வானொலி மூலமாக (குருகுலம்) போன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் கூட அதனை மாணவர்கள் தற்போது உள்ள மனோ நிலையில் அதனை எவ்வளவு தூரம் உள்வாங்குகின்றார்கள் என்பது பெரும் வினாவாகவே காணப்படுகின்றது. வறுமையின் கோர பிடியில் உள்ள கிராமத்து மாணவர்கள் எவ்வித தொலைபேசி (இணைய) வசதிகள் அற்று இருப்பதால் இதன் மூலமாக அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் தரம் ஐந்து மாணவர்களும் பெற்றோர்களும் தற்காலப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் காலப்பகுதியில் வீடுகளில் அடங்கிக் கிடக்கின்ற அவலமான நிலைக்கு தற்போதைய சமூகம் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொள்ளும் நிலைக்கு கொரோனா எமது சமூகத்தை தமது கையில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. தற்கால மாணவர்களுக்கு கொரோனா ஒரு சலுகையை வழங்கி இருக்கின்றது. தொலைபேசியை முன்பு மாணவர்கள் தொட்டால் போதும் பெற்றோர்கள் அனுமதிக்க மறுத்த நிலையில் இன்று மாணவர்களை தொலைபேசியும் கையுமாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. இது நாளடைவில் பெரும் உடல், உள சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை உணர்ந்து பெற்றோர்கள் தற்காலப்பகுதியில் மாணவர்களின் காவலாளிகளாக இருந்து மாணவர்களை நெறிப்படுத்துவது சிறந்தது.
பல்கலைகழக மாணவர்கள் இணைய வகுப்புக்கள், இணைய பரீட்சைகள், செயற்திட்டங்கள், அறிக்கைகள் என இவ்வாறான கற்றல் செயற்பாடுகளில் சிக்குண்டு இன்னலுறுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான செயற்பாடுகளை இணையத்தின் வழியாக இலங்கை உயர்கல்வி அமைச்சு பல்கலைகழக நிர்வாகத்தோடு இணைந்து செயற்படுத்தினாலும் இதன் மூலமாக முழு மாணவர்களும் பயனடைகின்றார்களா என்பது பெரும் ஐயமாகவே உள்ளது. குடும்ப வறுமையில் சிக்குண்ட சில மாணவர்கள் செய்வதறியாது பெரும் மன உளச்சலுக்கு உள்ளாகி இருப்பதை அவதானிக்க் கூடியதாக உள்ளது.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியல் குறித்த பட்பட்படிப்புக்களை நிறைவு செய்வது எப்படி என்ற ஐயமும் மாணவர்களின் மனதை குடைந்து கொண்டு இருப்பது நாம் கண்ட நிதர்ஷன உண்மை. இவ்வாறு அனைத்து மாணவர்களும் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு அதற்கு ஏற்றால் போல் கல்வி செயற்திட்டங்களை வழங்க முன்வர வேண்டும் அப்போது தான் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உயர்வு பெறும்.
இவ்வாறு எமது சமூகத்தில் காணப்படும் பல பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றை உரிய முறையில் தீர்க்க வேண்டிய பொறுப்பு நாட்டின் அரசாங்கத்தின் கடமையும் கல்வித்திணைக்களங்களினதும் உயர் கல்வி அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு சிறந்த தலைமைத்துவம் உள்ள மாணவர்களை உருவாக்குவதில் கற்றலுக்கு இடைஞ்சலாக உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதன் முலம் அதனை அடைந்து கொள்ளலாம்.
ந.கிருசாந்தினி.
இரண்டாம் வருடம்,
கல்வியியல் சிறப்பு கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.
பல்கலைகழக மாணவர்கள் இணைய வகுப்புக்கள், இணைய பரீட்சைகள், செயற்திட்டங்கள், அறிக்கைகள் என இவ்வாறான கற்றல் செயற்பாடுகளில் சிக்குண்டு இன்னலுறுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான செயற்பாடுகளை இணையத்தின் வழியாக இலங்கை உயர்கல்வி அமைச்சு பல்கலைகழக நிர்வாகத்தோடு இணைந்து செயற்படுத்தினாலும் இதன் மூலமாக முழு மாணவர்களும் பயனடைகின்றார்களா என்பது பெரும் ஐயமாகவே உள்ளது. குடும்ப வறுமையில் சிக்குண்ட சில மாணவர்கள் செய்வதறியாது பெரும் மன உளச்சலுக்கு உள்ளாகி இருப்பதை அவதானிக்க் கூடியதாக உள்ளது.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியல் குறித்த பட்பட்படிப்புக்களை நிறைவு செய்வது எப்படி என்ற ஐயமும் மாணவர்களின் மனதை குடைந்து கொண்டு இருப்பது நாம் கண்ட நிதர்ஷன உண்மை. இவ்வாறு அனைத்து மாணவர்களும் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு அதற்கு ஏற்றால் போல் கல்வி செயற்திட்டங்களை வழங்க முன்வர வேண்டும் அப்போது தான் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உயர்வு பெறும்.
இவ்வாறு எமது சமூகத்தில் காணப்படும் பல பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றை உரிய முறையில் தீர்க்க வேண்டிய பொறுப்பு நாட்டின் அரசாங்கத்தின் கடமையும் கல்வித்திணைக்களங்களினதும் உயர் கல்வி அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு சிறந்த தலைமைத்துவம் உள்ள மாணவர்களை உருவாக்குவதில் கற்றலுக்கு இடைஞ்சலாக உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதன் முலம் அதனை அடைந்து கொள்ளலாம்.
ந.கிருசாந்தினி.
இரண்டாம் வருடம்,
கல்வியியல் சிறப்பு கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.