முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பதில் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருமான பிரபல வைத்திய அதிகாரி டாக்டர் லங்காதிலக ஜெயசிங்க நேற்று(23) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 52.
அவரது பூதவுடல் இன்று(24) வெள்ளிக்கிழமை அம்பாறைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக சில மணிநேரம் வைக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலையென பெயர்பெறக்காரணமாயிருந்தவர் டாக்டர் லங்கா. அவர் முன்னாள் அத்தியட்சகர். அவர் அங்கள்ள வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களாலும் பிதாமகராக கொண்டாடப்படுபவர் எனலாம்.

வைத்தியதுறையில் நிருவாக முதுமாணி பூர்த்தி செய்த இவர் திரமானதொரு நிருவாகியாகத் திகழ்ந்தவர். திருமணமாகாதவர்.
கிழக்கு மாகாண பதில் சுகாதாரசேவைப்பணிப்பாளராக இருந்தபோது கடந்த 2018 டிசம்பரளவில் திடிரென உயர்குருதியமுக்கம் காரணமாக மூளையிலேற்பட்ட நரம்புவெடிப்பால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் கொழும்புக்கு விசேட ஹெலியில் கொண்டுசெல்லப்பட்டு பல காலம் தேசியவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றவர்.
இறுதியாக ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். பாரிசவாதத்தால் சுமார் ஒன்றரை வருடகாலம் வைத்தியசாலைகளில் காலம் கழிந்தது.
கொழும்பைச் சேர்ந்த அவர் இனமத பேதங்களை கடந்து மனிதத்தை மதித்த நம் வழிகாட்டி, மிகச் சிறந்த நிர்வாகி எனப்பெயரெடுத்த டாக்டர் லங்கா கல்முனை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவும் சிலகாலம் பணியாற்றியிருந்தார். 2013 ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற அவர் 2013 டிசம்பர் 7 ஆம் திகதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கையளிக்கும் வரை சீரியபணியாற்றியிருந்தார். சிறந்த நிருவாகத்தையும் அபிவிருத்தியையும் செய்தவர். இவரது காலத்தில்தான் வைத்தியசாலையின் முன்னாலிருந்த பழம்பெரும் பாரிய ஆலமரம் வெட்டப்பட்டு வைத்தியசாலை அபிவிருத்திக்கு திறந்து விடப்பட்டது. அதுவொரு திருப்புமுனையாகவிருந்தது. அதன் பின்னர் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலிய பெருமை டாக்டர் லங்காவையே சாரும்.
கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து விடைபெற்று கடந்தவருடம் வரை அங்குள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் திருவிழாப்பூசைகளில் ஒருநாள் பூசையை தானே பொறுப்பெடுத்து உபயகாரராக விளங்கியவர். கடந்த வருடம் அவர் நோயுற்றிருந்த காரணத்தினால் அவருக்காக அந்த ஒருநாள் பூஜையை அம்பாறை பொதுவைத்தியசாலை பாரமெடுத்து செய்துவருகின்றனர்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வைத்தியசாலை சார்பாக தமது அனுதாப அஞ்சலிகளை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையிலும் வெண்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இன்று கல்முனையிலிருந்து ஒரு குழுவினர் அம்பாறை சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வருகின்றனர்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்பு அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது பூதவுடல் இன்று(24) வெள்ளிக்கிழமை அம்பாறைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக சில மணிநேரம் வைக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலையென பெயர்பெறக்காரணமாயிருந்தவர் டாக்டர் லங்கா. அவர் முன்னாள் அத்தியட்சகர். அவர் அங்கள்ள வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களாலும் பிதாமகராக கொண்டாடப்படுபவர் எனலாம்.

வைத்தியதுறையில் நிருவாக முதுமாணி பூர்த்தி செய்த இவர் திரமானதொரு நிருவாகியாகத் திகழ்ந்தவர். திருமணமாகாதவர்.
கிழக்கு மாகாண பதில் சுகாதாரசேவைப்பணிப்பாளராக இருந்தபோது கடந்த 2018 டிசம்பரளவில் திடிரென உயர்குருதியமுக்கம் காரணமாக மூளையிலேற்பட்ட நரம்புவெடிப்பால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் கொழும்புக்கு விசேட ஹெலியில் கொண்டுசெல்லப்பட்டு பல காலம் தேசியவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றவர்.
இறுதியாக ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். பாரிசவாதத்தால் சுமார் ஒன்றரை வருடகாலம் வைத்தியசாலைகளில் காலம் கழிந்தது.
கொழும்பைச் சேர்ந்த அவர் இனமத பேதங்களை கடந்து மனிதத்தை மதித்த நம் வழிகாட்டி, மிகச் சிறந்த நிர்வாகி எனப்பெயரெடுத்த டாக்டர் லங்கா கல்முனை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவும் சிலகாலம் பணியாற்றியிருந்தார். 2013 ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற அவர் 2013 டிசம்பர் 7 ஆம் திகதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கையளிக்கும் வரை சீரியபணியாற்றியிருந்தார். சிறந்த நிருவாகத்தையும் அபிவிருத்தியையும் செய்தவர். இவரது காலத்தில்தான் வைத்தியசாலையின் முன்னாலிருந்த பழம்பெரும் பாரிய ஆலமரம் வெட்டப்பட்டு வைத்தியசாலை அபிவிருத்திக்கு திறந்து விடப்பட்டது. அதுவொரு திருப்புமுனையாகவிருந்தது. அதன் பின்னர் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலிய பெருமை டாக்டர் லங்காவையே சாரும்.
கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து விடைபெற்று கடந்தவருடம் வரை அங்குள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் திருவிழாப்பூசைகளில் ஒருநாள் பூசையை தானே பொறுப்பெடுத்து உபயகாரராக விளங்கியவர். கடந்த வருடம் அவர் நோயுற்றிருந்த காரணத்தினால் அவருக்காக அந்த ஒருநாள் பூஜையை அம்பாறை பொதுவைத்தியசாலை பாரமெடுத்து செய்துவருகின்றனர்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வைத்தியசாலை சார்பாக தமது அனுதாப அஞ்சலிகளை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையிலும் வெண்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இன்று கல்முனையிலிருந்து ஒரு குழுவினர் அம்பாறை சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வருகின்றனர்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்பு அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.