முதலையின் பிடியில் சிக்கி பலத்த காயங்களுடன் போரடித் தப்பிய தம்பிலுவிலை சேர்ந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி


(அஸ்ஹர் இப்றாஹிம்)

கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ரொட்டைப்பகுதியில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடுகளை மேய்ப்பதற்காக ரொட்டைக் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் எனப்படும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு முதலைப்பிடியில் சிக்கியுள்ளார்.

முதலைப்பிடியிலிருந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்