![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBE6TLQEHvtMZyEk4O-7bmmd2D_vEVELI69tZa3mGlU-hucHhyWzDxkugKU_aqgf75C4NhEFayJLw2nOvq7OevWZHFWO9Ch23M7ZBu0I7eaWMjO7S6rYAYChj1fGddSFnCQ_1_tmDDHeYyOz6e5s7jDtzYzE68_I-pdbE95fBRzRDJadNv8O5D6Ef-cdg/s16000/Confessions-of-a-True-Crime-Addict_NovelSuspects.webp)
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் அடித்து கொல்லப்பட்டார்.
இக்கொலை நேற்று (12) சிறிபாகம - தெற்கு மல்கெல்ல - தவனாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மல்வத்தை - இலுக்வத்தை - கிலிமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.