![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7MdJ9Nud_Eu67Lc1KrqUhLJ7qW0pJexQCd0Cwr2PV_ahwHbpXxCHQAj-r3zcF-TC0hdsPAcVvuWZhmOcv3hHaTTRfmcE-6_S_0hUYR6Vl7Euionq-FJ15kdVywoo1NciCdMsNv4zJF4wVBt8oh0Vo_tR8gPHXP1gvjLc-bhxGuA3kdQKTDB3DvZEn5eI/w665-h444/image_523fd7917d.jpg)
ஒரேயொரு அறையில் காதொன்றில் மூன்று தையல்கள் போடுமளவுக்கு அறைந்தார் என்றக் குற்றச்சாட்டில் கண்டி மாநகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்கள ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது நகர சபை ஊழியருக்கு காது பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்த காயங்கள் காரணமாக அவரது காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குப்பைகளை வகைப்படுத்தாமல், குப்பைப் பையை வாகனம் மூலம் கொண்டு வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்கள், குப்பையை முறையாக கொண்டு வருமாறு கூறி, குப்பை பொறுப்பெடுக்காது, காரிலேயே ஏற்றிவிட்டுள்ளனர். அத்துடன், வாகனத்தை இலக்கத்தை படம் எடுக்க முயன்றுள்ளனர். இதன்போதே, கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இந்திக்க தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் கண்டி- சுதாஹம்பொல ஊழியர்கள் வேலையில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) விலகியுள்ளனர்.
குப்பைகளை முறையாக பிரிக்காமல் முறையாக அகற்றுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த கண்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.