பொலன்னறுவையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹகல பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலஹகல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.