சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது !


கொழும்பு மெகசீன் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொறள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து 16,112 மில்லி கிராம் ஹெரோயின், 12924 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 73855 மில்லி கிராம் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொறள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொறள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.