கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்


கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று (01) சந்நிதியான் ஆச்சிரமத்தி்ல் விசேட பூசை வழிபாடுகளுடனும், காலை ஆகாரமும் ஒரு தொகை நிதியும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசிர்வாதத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல ஆகிய மாவட்டங்கள் ஊடாக 46 தினங்களில் 815 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கதிர்காமம் சென்றடையும்.

மேலும், கதிர்காம ஆலய கொடியேற்ற நிகழ்வு அடுத்தமாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.